Monday, October 25, 2010

முதல் வணக்கம்

வினாயகர் துதி

ராகம் : நாட்டை தாளம் : ஆதி

பல்லவி

அனாதி நாள் முதல் அனைவரும் போற்றும்
கணாதிபதயே கஜமுகனே....
( அனாதி)

அனுபல்லவி
குணா நிதியே குவலயம் காப்பாய்....
தனாதிபதயே தயை புரிவாய்....
(அனாதி)

சரணம்
அனாத ரட்சகா .... ஆபத் பாந்தவா...
வினாச கால வினை தீர்ப்பாய், அங்கெங்
கெணாத படி எங்கும் இருக்கும்...
வினாயகனடி பணிந்திடுவோம்.
(அனாதி)

5 comments:

  1. வேர்ட் வெரிஃபிகெஷன் வேண்டாமே.. பிளீஸ்

    ReplyDelete
  2. நன்றி திரு ரிஷபன் அவர்களே!
    word verification ஐ எடுத்து விடுகிறேன்!

    ReplyDelete
  3. க‌விதைக்கென்று ஒரு த‌ள‌ம்.
    கரும்பு, புகையிலை, இர‌ண்டுமே நம‌க்குப் பிடித்தாலும்,
    விளைவிக்க‌ வெவ்வேறு நிலம் வேண்டியிருக்கிற‌து தானே?
    நஞ்செய்யாய், புஞ்சையாய்!!
    வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  4. நாயகன் = தலைவன்
    விநாயகன் = தலைவன் இல்லை

    அதாவது, விநாயகனுக்கு மேல் ஒரு தலைவன் அல்லது தெய்வம் இல்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.

    கிருபானந்த வாரியாரின் “விநாயகர் பெருமை” என்ற
    சொற்பொழிவில் கேட்டது.

    தரனின் கீர்த்தனாஞ்சலி ஆரம்பமே விநாயகரில் தொடங்குகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete