இந்த பாடல் புனையப் பட்ட நாள் 13.11.1998 நேரம் காலை 10.20 மணி. நண்பர் ஒருவர் நான் ஏதோ இந்த மாதிரி எழுதுவதைப் பார்த்து சொன்னார்: " அப்பா, மதுரை, மீனாக்ஷி அம்மன் கோவிலில் மனோன்மணியம் என்று ஒரு தெய்வம் இருக்கிறது. அவளிடம் நீ மனமுருகி வேண்டினால், கருத்தாழம் மிக்க பாடல்களை நீ புனைய அருள் புரிவாள்" என்று கூற, அடுத்த நாளே எழுதிய பாடல் இது! இதன் பிறகு மதுரை கோவிலுக்கு பல தடவை சென்றுள்ளேன். இருந்தும் அந்த அம்மன் இருக்கும் இடம், நான் கேட்ட யாருக்கும் தெரியவில்லை.. ஆகவே, மதுரை அன்பர்கள் இந்த விஷயத்தில் உதவி, இந்த அந்தகனின் அகக் கண்ணினை திறந்தால், மிக்க நன்றி உடையவனாய் இருப்பேன்...)
ராகம் : சுபபந்துவராளி தாளம் : ஆதி
பல்லவி
மதுரையில் உறைந்திடும் மனோன்மணியமே
மனதினில் இறைமையை ஊட்டிடுவாய்-தேவி
அனுபல்லவி
வாக்கிலே வளமையும்,புலமையும்வர வேண்டும்
நோக்கிலே எண்ணங்கள் உயர்ந்திடல்வேண்டும்
சரணம்
பாக்களில் நின்னை அர்ச்சிக்கும் வரம் வேண்டும்
என் நாவினில்நின் பதம்நர்த்தனமிடல்வேண்டும்
ஏக்கம் என்னுள் மறைந்திட வேண்டும்,
நீக்கமற நீ நின்றிடல் வேண்டும்.......
--- சுபம் -----
மனோன்மணியம் துதி கருத்துடன் அமைந்திருந்தது. மதுரை நண்பர்கள் மூலம் தங்களுக்கு மனோன்மணியம்மன் சன்னிதி இருப்பிடம் விரைவில் தெரிய வேண்டி ப்ரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஆர்.ஆர்.ஆர்! நானும் சில மதுரை நண்பர்களைக் கேட்டுப் பார்த்தேன். மனோன்மணீயம் சன்னதி அவிய்ங்களுக்கும் தெரியலை. கீர்த்தனை அழகு. மன்னிக்கவும்.இன்றுதான் இந்தப் பதிவைக் கண்டேன்ஜி!
ReplyDeleteநல்ல பாடல்..நல்ல ராகம்..வாழ்த்துக்கள்..
ReplyDeleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteவாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!
தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....
ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....
அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....
மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
95666 61214/95666 61215
9894124021